பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை
விசாரணைக்காக கொழும்பு சென்ற குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவின் விசாரணைக்காக கடந்த 6 ஆம் திகதி பரமு விஜயராஜ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையார் இதுவைர வீடு திரும்பவில்லை என வல்வெட்டித்துறை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவரது மனைவியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமனாறு கெருடாவில் பகுதியச்சேர்ந்த இவர் மிகவும் வறிய நிலையில் வசித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed